வேதங்களை ஓதுகிறார்கள்,சாத்திரங்களை
யெல்லாம் கரைத்துக் குடிக்கிறார்கள்
இருந்தாலும் அவர்கள் இறைவனை
அறிய முடிவதில்லை
நாத்திகர்களோ இறைவன் இல்லை,
இருக்கிறான்
என்றால் காட்டு என்கிறார்கள்
இறைவன் உண்டு என்று நம்புகின்ற
ஆத்திகர்களாலேயே அறியமுடியாதபோது
இல்லை என்று முடிவு செய்து விட்ட
நாத்திகர்களால் எப்படி இறைவனை
அறிய முடியும்?
இந்த இருவரும் ஒரே தவற்றைச்
செய்கிறார்கள்
இறைவனை 'அறிய' முயல்கிறார்கள்
உண்மை என்னவென்றால் இறைவனை
உணரத்தான் முடியும்,அறிய முடியாது
அறிவுக்கு எட்டாதது எதுவோ அதுவே
இறைமை.
-அப்துல் ரகுமான்
இதையே அன்னையின் சைத்தியக் கல்வி சொல்கிறது.
''அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு''. ஆன்ம அனுபவம் இறைத் தேடலுக்கு வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக