வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

பரசிவவெள்ளம்


மகாகவி அவர்கள் பிரம்மஞானத்தை தாம் பெற்ற சக்தி வாய்ந்த மொழிவளத்தால் அற்புதமாக ''பரசிவவெள்ளம்'' என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார்கள்.இது ஆசான் அருட்தந்தை அவர்கள் அளித்து வரும் பிரம்ம ஞானத்திற்கு அத்தாட்சியாக உள்ளது.அருட்தந்தை அவர்கள் பிரம்மத்தை ''ALL PENETRATIVE,HIGHLY TRANSPARENT IMPERCITABLE ARK FLUID MATTER"என்று வர்ணிக்கிறார்கள்.

                                        FLUID  என்பதை  நீர் போன்ற  ஒரு பொருள் என்று கொள்ளக் கூடாது.எங்கும்,எதிலும் ஊடுருவக் கூடிய புலன் கடந்த இறைவெளியின் ஆற்றல் என்றே கொள்ள வேண்டும்.

                                       வெள் என்றால் தூய்மையான என்று பொருள்.அம் என்றால் பிரணவம் .ம் என்ற மெய் தனித்து ஒலிக்காது என்பதால் மெய்யோடு உயிர் சேர்ந்து அம் என்கிறோம்.உயிரும்,மெய்யும் சேர்ந்தால் உ+அம்=ஓம் என்றும்  கூறினார்கள் .இதையே ''பரசிவ வெள்ளம்''என்றார் கவிஞர் பெருமான்.
பகவான் ஸ்ரீஅரவிந்தர் தொடர்பால் ஆன்ம ஒளி பெற்றார்.

2 கருத்துகள்: